மட்டு. மாநகர சபையினால் நடாத்தப்பட்ட இப்தார் நிகழ்வு

மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்களின் தலைமையில் புனித றமழான் இப்தார் நிகழ்வு கோட்டைப் பூங்காவில் றம்மியமான சூழலில் நடைபெற்றது. 

இந்நிகழ்வின் அதிதிகளாக ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயல் மௌலவி ஜனாப் நளீம் பலாஹி பே இமாம் அவர்களும் மட்டக்களப்பு இராம கிருஷ;ண மிஷன் தலைவர் சுவாமி பிரபு பிரபானந்தா மஹராஜ் அவர்களும் சென் செபஸ்டியன் தேவாலய அருட் தந்தை நவாஜி நவரெட்ணம் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்களின் தலைமையுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வு மும்மத பெரியார்களின் ஆசியுரையின் பின்னர் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.