சிங்களமொழி படிவத்தால் சிரமம்

(சுபஜன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொழில்த் ; திணைக்கள காரியாலயத்தில் தங்களின் கருமங்களை முடித்துக்கொள்ளச் செல்லும் சேவை நாடுவோரிடம் சிங்களமொழியில்; படிவங்கள் வழங்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பான கருமங்களை முடித்துக் கொள்வதற்காக மேற்படி  தொழில் திணைக்கள காரியாலயத்தில் சிங்களமொழியில்; படிவங்கள் வழங்கப்படுவதாகவும் இதனால், தாம் சங்கடத்தை எதிர்நோக்குவதாகவும் சேவை நாடுவோர் கூறுகின்றனர். இந்தப் படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கு தாம் சிங்களமொழி எழுதத் தெரிந்தவர்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளதாகவும்; இது தமக்கு மேலதிகமான சுமையையும் நேர விரயத்தையும் திருப்தியின்மையையும் அவர்கள் கூறினர். 
எனவே, இந்த விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட சம்பந்தப்பட்ட திணைக்களத்தின் அதிகாரிகள் சிரத்தை எடுக்க வேண்டும் சேவை நாடுவோர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.