கண்ணகி கலை இலக்கிய விழாவில் ''மாதவி அரங்கு'' நிகழ்வுகள் - படங்கள் & வீடியோ

(எஸ்.சதீஸ்)
கிழக்கு மாகாணத்தில் மிக சிறந்த நிகழ்வென பலராலும் புகழாரம் சூட்டப்பெற்ற கண்ணகி கலை இலக்கிய விழா கடந்த25,26ம் திகதிகளில் மண்முனை மேற்கு பிரதேசத்தின், கன்னன்குடாவில் மிக பிரமாண்டமாக இடம்பெற்றது.

இதில் இரண்டாம் நாள் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிகழ்வுகள்  ''மாதவி''  அரங்கில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதிகள் உரை, தீப நடனம், கண்ணகி அம்மன் காவடி காவிய பாடல், நடனம், பரதநாட்டியம் மற்றும் நாட்டிய நடனங்கள், பாடல்கள்   உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றது.

இவ் மாதவி அரங்கு நிகழ்வில், முதன்மை அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் த.ஜெயசிங்கம், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் போன்றோர் கலந்துகொண்டனர்.

இன்று காலை இடம்பெற்ற இளங்கோவடிகள் அரங்கின் நிகழ்வில் முதன்மை அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கலந்து சிறப்பித்தார்.

இன்றைய இந் இதன்போது, ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.