கடைகள் உடைத்து மூன்றரை இலட்சம் பணத்தினை திருடியவர் விளக்கமறியலில்

(எப்.முபாரக்)                      


திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் கடையொன்றினை உடைத்து மூன்றரை இலட்சம் ரூபாய்  பணத்தினை திருடிய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம்  11ஆம்திகதி வரை விளக்கமறியலில் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் எச்.ஜி.தம்மிக்க இன்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்டார்.                                


 கந்தளாய் பிரதேசத்தில் கடந்த வாரம் இரண்டு அலைபேசி கடைகள் மற்றும் இலத்திரனியல் கடைகளும் உடைக்கப்பட்டிருந்தது. இதிலிருந்து மூன்றரை இலட்சம் ரூபாய் பணம் மற்றும் இதர இலத்திரனியல்  பொருட்களும் திருடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.                                   

இக்கடையுடைப்பு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்து இன்று கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.                                
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.