விபத்தில் ஒருவர் பலி.

(எப்.முபாரக்)
திருகோணமலை 05ஆம் கட்டைப்பகுதியில், இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, வாகனமொன்று மோதியதிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் வாகனத்தை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.டி.பிரேமரத்ன (48வயது) என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.