பழம் தந்தால் வழி விடுவேன் என்கிறதா இந்த யானை?

(காரைதீவு  நிருபர் சகா)
புத்தல - கதிர்காம பிரதான வீதியில் இரவில் மட்டுமல்ல பகலிலும் யானைகள் அண்மைக்காலமாக வழியை மறிக்கின்றன. பலர் இவைகளைப்பார்த்தவுடன் பயத்துடன் மிகவும் தள்ளி வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். 

உண்மையில் இவ்யானைகள் பழத்திற்காகவே வீதியை மறிக்கின்றன. நேற்றும் ஒரு யானை காலை 9.30மணியளவில் வீதியை மறித்தது. சாரதி ஏலவே வாங்கிவைத்திருந்த வாழைப்பழத்தைக் கொடுத்ததும் வழியை விட்டது. பின்னர் பயணம் தொடர்ந்தது. அக்காட்சியை எமது நிருபர் அபப்யணத்தில் சென்றதனால் அவரது கமராவிற்குள் சிறைப்படுத்தினர். அதனை இங்கு காணலாம்.