தம்பிலுவில் கலைமகள் வீதியில் மோட்டார் குண்டு மீட்பு

திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் கலைமகள் வீதியில் இருந்து நேற்று சனிக்கிழமை (25) மாலை சிறியரக மோட்டார் குண்டு ஒன்று மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். ஸ்ரீ லங்கா டெலிக்கொம் நிறுனத்தின் ஊழியர்கள், தூண் ஒன்றை நடுவதற்காக மடுவினை தோண்டிய போது, இந்த குண்டைக் கண்டுள்ளனர்.

 பின்னர் இது குறித்து திருக்கோவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, குண்டு மீட்கப்பட்டுள்ளது. குண்டு செயழிக்கும் பிரிவினர் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.