பல்கலைக்கழக அனுமதி பெற்ற 30 பேருக்கு புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு !!



கல்வி சேவை ஊழியர்களின் கூட்டுறவு சிக்கன கடனுதவி சங்க உறுப்பினர்களின்  2013/ 2014 ம் ஆண்டு  வருடத்தில் பல்கலை கழக  அனுமதி பெற்ற மாணவ மாணவிகளுக்கு புலமை பரிசில் வழங்கும் வைபவம்  30 திகதி இன்று காலை Y.M C A  மண்டபத்தில் இடம்பெற்றது .

முதல் நிகழ்வாக மங்கள விளக்கேற்றல் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ  அவர்களால் மங்கள விளக்கேற்றப் பட்டது.

அதை தொடர்ந்து இலங்கை ஆசிரியர் சேவை சங்க உபதலைவரும், கல்வி கூட்டுறவு சங்க  உபதலைவருமான சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களினால்  தலைமை உரை வழங்கப் பட் டதுடன்   30 பேருக்கான புலமை பரிசில்கள் வழங்கி வைக்கப்பட் டது .

இந்த நிகழ்வுக்கு மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ ,கல்வி கூட்டுறவு தலைவர் பிரதீப் மற்றும் சமய தலைவர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது