மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவாளர்களின் 94 ஆவது ஆண்டு விழா


(சிவம்)

சர்வதேச கூட்டுறவாளர் தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவாளர்களின் 94 ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை மாலை (29) அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டகூட்டுறவுச் சபையின்தலைவர் இ. இராயப்பு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் தேசிய மட்ட தமிழ் மொழித் தினப் போட்டி -2016 இல் பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பேரியபோரதீவு பாரதி வித்தியாலய மாணவி ரவீந்திரன் கிஷாலினி மற்றும் 3 ஆம் இடத்தைப் பெற்ற வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலய மாணவி ஜெயக்குமார் விகடாயினி ஆகியோரின் பேச்சுக்கள் இடம்பெற்றதோடு பரிசுகளும் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் கே. சிவநாதன், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் வி. திவாகர சர்மா, கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் (தலைமை அலுவலகம்) திருமதி ஜி.ராஜினி மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்(மட்டக்களப்பு) எஸ். கிருபைராஜசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

2016ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ்த் தின போட்டியில் தனி இசைப்போட்டியில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய உயர்தரப்பாடசாலை மாணவி சிவநாதன் சியஸ்சியா முதல் இடத்தினைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.