கையடக்கத்தொலைபேசிகளை மாணவர் மட்டுமல்ல பரீட்சை நோக்குனர்களும் வைத்திருக்கலாகாது!

(காரைதீவு சகா )

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள்இ ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் எடுத்து வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ள அதேவேளை பரீட்சை மண்டபத்தினுள் பரீட்சை மண்டப நோக்குனர்களும் மேற்கூறப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களை பாவிக்கவோ கொண்டுவரவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோக்குனர்கள் அவர்களது தொலைபேசிகளை மூடி மேற்பார்வையாளரிடம் கொடுத்துவிட்டே மண்டபத்தினுள் வரவேண்டும்.
மேற்பார்வையாளர் மாத்திரம் தனது செல்லிடத்தொலைபேசியை  அமைதியில் வைத்த்திருக்க அனுமதியுண்டு.
நோக்குனர்கள் யாராவது மண்டபத்தினுள் தொலைபேசி வைத்திருந்து மாட்டினால் மேற்பார்வையாளர்மீது நடவஎக்கை எடுக்கப்படும்.

கல்வியமைச்சின் 03 திடீர் சோனைக்குழுக்கள் நாடளாவியரீதியில் பரவலாக சோதனையிலீடுபடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே பரீட்சையை நே;hமையாகவும் நீதியாகவும் நடாத்த பரீட்சை ஊழியர்கள் கூடுதல் ஒத்துழைப்பையும் உதவியையும் வழஙங்கவேண்டும் என பரீட்சைத்திணைக்கள்ம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்படி உபகரணங்கள் பரீட்சை மண்டபத்தினுள் பரீட்சார்த்திகளுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பெறுபேறுகள் ரத்து செய்யப்படும். இவர்களுக்கு 05 வருடங்களுக்கு எந்தவொரு அரசாங்கப் பரீட்சைகளும் எழுத அனுமதிக்கப்படமாட்டாது. கண்டு பிடிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி அல்லது ஸ்மார்ட் கைக்கடிகாரம் அல்லது இலத்திரனியல் சாதனங்கள் அரசுடமையாக்கப்படும்.

எதிர்வரும் 02 ஆம் திகதி க. பொ. த உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவற்றை கண்டுபிடிப்பதற்கென நான்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வலய மட்டத்திலும் விசேட குழுக்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்.

கையடக்கத் தொலைபேசிகள் ஸ்மார்ட கைக்கடிகாரங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் என்பவற்றை மாணவர்கள் எடுத்து வருகிறார்களா என்பதனை தீவிரமாக கண்காணிக்குமாறு பரீட்சை மண்டப உத்தியோகத்தர்களுக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவுறுத்தலை விடுத்துள்ளது.