மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வு

(படுவான் பாலகன்) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் வாழ்வின் எழுச்சி திணைக்களமும் சமூதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களமும் இணைந்து நடாத்திய போதைப் பொருள் ஒழிப்பு தின ஊர்வலமும் கருத்தரங்கும் இன்று(29) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.தவராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.கணேசராசா, டொக்டர் யூடி  ரமேஸ் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.