கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.எம் அலாவுடீன் தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை காரியாலயத்தில் நேற்று (28) மாலை இடம்பெற்றது.
பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு 08 வைத்தியர்களும், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 06 வைத்தியர்களும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு 03 வைத்தியர்களும், இறக்கமாம் பிரதேச வைத்தியசாலைக்கு 03 வைத்தியர்களும், தீகவாபி பிரதேச வைத்தியசாலைக்கு 01 வைத்தியரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.