சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா மொடேர்ன் பாம் வீட்டுத்திட்ட பகுதியில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப் பட்ட குடும்பஸ்தரை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா வியாழக்கிழமை (28) உத்தரவிட்டார். 



தனது சகோதரியின் மகள், தனது கணவரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று சந்தேக நபரின் மனைவியால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.