கிழக்கு பல்கலைகழக மருத்துபீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைகழக மருத்துபீட மாணவர்கள் இன்று (27) பிற்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்

பல்கலைகழகத்தில் பேராசிரியர் கற்பிக்கும் அலகை நிர்மாணிப்பதற்கென முன்னாள் உயர்கல்வி அமைச்சினால், நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், குறித்த கட்டடம் இதுவரை கட்டி முடிக்கப்படாமல் உள்ளமை மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.


கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் ஆகியோருக்கு எதிரான சுலோகங்களையும் மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.


மருத்துவ மாணவர்களுக்கான இறுதி வருட பயிற்சிகள் குறித்த பிரிவிலேயே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.