இலங்கை கால்பந்துச் சம்மேளனத்தின் பிரிவு 2 கால்பந்தாட்டத் தொடரின் முதல் சுற்றில் மன்னார் புனித அந்தோனியார் கழகத்தை வென்றது மட்டக்களப்பு யங்ஸ்டார் கழகம்


 இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தால்; நடத்தப்படும் பதிவு செய்யப்பட்ட கால்பந்துச் சங்கங்களின் முதல்நிலைக் கழகங்களுக்கடையிலான பிரிவு 2 கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி தற்போது நாடளாவிய ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

இதில் இம்முறை மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்திலிருந்து சீலாமுனை யங்ஸ்டார் கழகமும், ஏறாவூர் யங்ஸ்டார் கழகமும் பங்குபற்றத் தகுதி பெற்றுள்ளன.

இதில் சீலாமுனை யங்ஸ்டார் கழகத்திற்கும் மன்னார் கால்பந்தாட்ட லீக்கிலிருந்து தெரிவான புனித அந்தோனியார் கழகத்திற்கும் இடையிலான போட்டி நேற்றைய தினம் (25.08.2016) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் திரு.மா.உதயகுமார் அவர்கள் இப்போட்டியினை ஆரம்பித்து வைக்கும் அதிதியாகக் கலந்து கொண்டார். அதிதிக்கு வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பி.ப 4:15 மணியளவில் போட்டி ஆரம்பமாகியது.

இப்போட்டிக்கு நடுவர்களாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கால்பந்தாட்ட நடுவர்கள் கடமையாற்றியிருந்தார்கள். 

இப்போட்டியில் யங்ஸ்டார் அணியினர் 4:0 எனும் பேறினால் வெற்றியடைந்து இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.