இலங்கையை சேர்ந்த 5 இளைஞர்கள் கெம்பர் சேண்ட்ஸ் ( camber Sands ) கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த 5 இளைஞர்கள் இங்கிலாந்தின் சசெக்சில்  கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் சடலங்கள் தற்போதைய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞர்கள் ஐவரும் தென் கிழக்கு லண்டனின் கிரீன்விச் பிரதேசத்தில் வசித்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும் , குறித்த இளைஞர்களின் ஒருவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

அதேபோல் , உயிரிழந்தவர்கள் பிப்டன் பல்கலைக்கழகத்தில் கல்விகற்று வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

லண்டன் கடற்கரையில் நீராட சென்ற சந்தர்ப்பத்திலேயே இவர்கள் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.


கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கையைச் சேர்ந்த 5 தமிழ் இளைஞர்களின் படங்கள் மற்றும் பெயர் விபரங்கள்

நிதர்சன் ரவி (22) , இந்துசன் (23) , கோபிநாதன் (22) , கென் நாதன் (19) மற்றும் குருசாந்த் (27) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.