கஞ்சா சுருட்டு - மூவர் விளக்கமறியலில்

(என்.ஹரன்)
கஞ்சா சுருட்டுகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான சந்தேகநபர்கள் மூவரையும், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி, நேற்றுப் புதன்கிழமை (24) உத்தரவிட்டார்.

ஆலையடிவேம்பு இத்தியடி மீன்சந்தைக்கு அருகாமையில் வைத்தே மேற்படி மூவரையும், செவ்வாய்க்கிழமை (23) இரவு அக்கரைப்பற்றுப் பொலிஸார் கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது