காணாமலாக்கப்பட்டோர் தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது

 
(வரதன்)
சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தொண்டு நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் இணையத்தின் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்டோரது உறவினர்கள்  பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்கா அருகில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பின் நிறைவில் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் எம். அஸஸிடம்  கையளிக்கப்பட்டது.


நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசனை செயலணிக்கு ஓர் பகிரங்க சமர்ப்பித்தல்- வலிந்து காணாமலாக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வு என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்த கவனஈர்ப்பில் போரில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க ஐ.நா நிலைமாறு கால நீதி முன்னெடுப்பில் இணைப்பங்காளியாவதற்கு இலங்கையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்க என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

.