(Ch.சுஜா)
115க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடி பிரச்சினைக்கு தீர்வு ! நீண்ட காலமாக புலையவெளி,தம்பானம்வெளி கிராமங்களில் நிலவி வந்த குடி நீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஐம்பது இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் ஈழப்பதீஸ்வரர் ஆலயம் மூலம் பெற்றுக் கொடுத்தார்.முழுமையாகன ஒரு முக்கிய செயற்றிட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
"மிகப் பெரிய மனித நேயச் செயற்பாடு. கிழக்கு மாகாணத்தை நோக்கி இத்தகைய பாரிய செயற் திட்டத்தை முன்னேடுப்பதற்கு வழியமைத்த வியாழேந்திரன் MPஅவர்களையும்,ஈழப்பதீஸ்வர தர்ம கர்த்தா அவர்களுக்கும் மக்கள் பெரிதும் தமது நன்றிகளை கூறினர். இந்தக் கிராமம் தோன்றிய காலத்திலிருந்து நீர் வசதி நிரந்தரமாக கிடையாது . அரசாங்கம் வழங்கும் குடி நீர் வசதி கூட உடனே கிடைக்கப் போவதில்லை .அதற்கு கூட குறிப்பிட்ட அளவு பணம் செலுத்த வேண்டும். ஆனால் ஒரு சதம் கூட செலுத்தாமல் குடி நீர் வசதி பெற்றுள்ளோம். இவரின் பணிகள் தொடர வேண்டும்." என கிராமத் தலைவர் தெரிவித்தார்.