கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிரமதானம்

(படுவான் பாலகன்)  பொலிஸ் திணைக்களத்தின் 150வது ஆண்டு நிறைவினை சிறப்பித்து கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிரமதானப்பணி ஒன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தர்கள், மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினர், கொக்கட்டிச்சோலை இராணுவத்தினர், கொக்கட்டிச்சோலை வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் இணைந்து குறித்த சிரமதானப்பணியினை மேற்கொண்டனர்.