மகிழடித்தீவில் சத்துணவு வழங்கி வைப்பு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட போசாக்குறைபாடுடைய குழந்தைகளுக்கு போசாக்கு உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது பிள்ளைகளுக்கு எவ்வாறான சத்துணவு செய்து வழங்க வேண்டும் என்ற செய்முறைப்பயிற்சியும் பெற்றோர்களுக்கு செய்து காட்டப்பட்டது.


பிரதேசத்தில் இனங்காணப்பட்ட சத்துக்குறைவான 243பேருக்கு இதன்போது போசாக்கு உணவு பொதி வழங்கப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.

இதில் சுகாதார வைத்திய அதிகாரி டொ.எஸ்.சண்முகநாதன், வேள்விஸன் நிறுவன இணைப்பாளர் நி.யேசுதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்

இதனை பட்டிப்பளைப்பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், வேள்ட்விஸன் நிறுவனமும் இணைந்து மேற்கொண்டிருந்தது.