சாதனைகள் படைப்பதில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துள்ள Eastern International Collegeன் மற்றுமொரு மகத்தான சாதனை. 2016 ஜுன் மாதம் நடை பெற்று முடிந்த IGCSE (London O/L) பரீட்சைக்கு தோற்றிய 9 மாணவர்களும் திறமையான முறையில் சித்தியடைந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
அதில் முகமட் நிஸார் றிலா எனும் மாணவன் 5 அதி விசேட (A*) சித்தியும் 1 விசேட சித்தியும் (A) 2 திறமைச் சித்திகளுடனும் சிறந்த பெறு பேற்றினைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு மாணவியான ருக்ஷிக்கா ராஜ்குமார் 4 அதிவிசேட (A*) சித்தியும் 3 (A) சித்தியும் 1 திறமை (c) சித்தியையும் 1 சாதாரண சித்தியையும் பெற்று 2ம் இடத்தைப் பெற்றுள்ளார். ஏனைய 7 மாணவர்களும் அதிவிசேட, விசேட, திறமை, சாதாரண சித்திகளுடன் சிறந்த பெறு பேற்றினைப் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
இலங்கையிலுள்ள ஏனைய வளம் மிக்க சர்வதேசக் கல்லூரிகளுக்கு நிகராக எமது கல்லூரியும் கல்வி சார் நடவடிக்கைகளில் மேம்பட்டு நிற்பதை இட்டு பெருமைப்படுகின்றோம்.