கடுகதி புகையிரத்தில் மோதூண்டு இளைஞர் பலி

எப்.முபாரக்  திருகோணமலையிலிருந்து கொழும்புபை நோக்கிச் சென்ற கடுகதி புகையிரத்தில் மோதூண்டு இளைஞர்  பலியாகியுள்ளார்.

 தம்பலகமம் பிரதேசத்தைச் சேர்ந்த சிவஞான வடிவேல் அனோஜன் வயது(20) என்பவரே புகையிரதத்தில் மோதூண்டு பலியாகியுள்ளார்.

 இவ்விபத்துச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (29) மாலை 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தம்பலகமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,


குறித்த நபர்  புகையிரத பாதையில் தூங்கியுள்ளதாகவும் திருகோணமலையில் இருந்த கொழும்புக்குச் சென்ற இரவு நேர கடுகதி புகையிரதத்தில் மோதூண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான விசாரணைகளை தம்பலகமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.