பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2015 ஆகஸ்ட் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி மாணர்களுக்கான வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் 45 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதியினைப் பெற்றுள்ளனர்.
இவற்றில் விஞ்ஞானப் பிரிவில் 2 மாணவர்களும், கணிதப் பிரிவில் 9 மாணவர்களும், வர்த்தகப் பிரிவில் 15 மாணவர்களும், கலைப் பிரிவில் 19 மாணவர்களும் அடங்குவர்.
வி.சுவானி மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் ரி.சனாத்தனன், ஜி.சுபாஜினி, எஸ்.துஸ்யந்திமாலா ஆகியோர் பொறியியல் பீடத்திற்கும் செ.விமல்ராஜ் சட்ட பீடத்திற்கும் தெரிவாகியுள்ளனர்.