பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் 45 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதி


பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2015 ஆகஸ்ட் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி மாணர்களுக்கான வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் 45 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதியினைப் பெற்றுள்ளனர்.


இவற்றில் விஞ்ஞானப் பிரிவில் 2 மாணவர்களும், கணிதப் பிரிவில் 9 மாணவர்களும், வர்த்தகப் பிரிவில் 15 மாணவர்களும், கலைப் பிரிவில் 19 மாணவர்களும் அடங்குவர்.

வி.சுவானி மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் ரி.சனாத்தனன், ஜி.சுபாஜினி, எஸ்.துஸ்யந்திமாலா ஆகியோர் பொறியியல் பீடத்திற்கும் செ.விமல்ராஜ் சட்ட பீடத்திற்கும் தெரிவாகியுள்ளனர்.

இப்பாடசாலையின் வரலாற்றில் இவ்வருடம் கணிதத்துறையில் அதிகளவு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.