கிராமிய பாடல் போட்டியில் பட்டிப்பளை பிரதேச செயலகம் முதலிடம்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்ட கலாசார அதிகார சபையினால் நடாத்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான கலை, கலாசார போட்டி நிகழ்வில் கிராமிய பாடல் போட்டியில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் முதலிடத்தினை பெற்றுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 14பிரதேச செயலகங்கள் போட்டிகளில் கலந்து கொண்டதுடன், கிராமிய பாடல் போட்டிக்கு பத்து பிரதேச செயலகங்கள் விண்ணப்பித்து போட்டியில் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில் வியாழக்கிழமை(22) இப்போட்டி நடைபெற்றது. இதன்போது மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய கிராமிய பாடல் குழுவினர் மட்டக்களப்பு மண்ணின் மண்வாசனையினையும் பாரம்பரியத்தினையும் முற்று முழுதும் தழுவியதாக பாடலைப் பாடி வெற்றி பெற்றுள்ளனர்.