மட்டக்களப்பு றோட்டறி ஹெரிட்டேச் கழகத்தின் புதிய தலைவர் நியமனம்


(சிவம்)

மட்டக்களப்பு றோட்டறி ஹெரிட்டேச் கழகத்தின் இரண்டாவது புதிய தலைவருக்கான பதவியேற்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (24) மாலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது.

றோட்டறியன் கௌரி ராஜன் (மாவட்ட ஆளுனர் 2014- 2015) பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் புதிய தலைவராக றோட்டறியின் கே. ஜெகநாதன் பதவியேற்றார்.

புதிய தலைவருக்கான (2016-2017) பதவி முத்திரைகளை கடந்து செல்லும் தலைவர் றோட்டறியின் எஸ். கிரிதரன் (2015-2016) வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சக்கர நாற்காலி ஒன்று பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

நடப்பாண்டிற்கான (2016-2017) செயலாளராக றோட்டறியின் ஜி. நிர்மலராஜ் மற்றும் செயலாளராக றோட்டறியின் எம். சோபனராஜா ஆகியோர் பதவியேற்றனர்.

விசேட அதிதியாக றோட்டறியன் ஆதில் ரபீக் ( உதவி ஆழுனர் 2016-2017) மற்றும் கௌரவ அதிதியாக றோட்டறியன் தொமிங்கோ ஜோர்ஜ் ( தலைவர் மட்டக்களப்பு றோட்டறிக் கழகம் ( 2014-2015) கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.