(சிவம்)
மட்டக்களப்பு றோட்டறி ஹெரிட்டேச் கழகத்தின் இரண்டாவது புதிய தலைவருக்கான பதவியேற்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (24) மாலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது.
றோட்டறியன் கௌரி ராஜன் (மாவட்ட ஆளுனர் 2014- 2015) பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் புதிய தலைவராக றோட்டறியின் கே. ஜெகநாதன் பதவியேற்றார்.
புதிய தலைவருக்கான (2016-2017) பதவி முத்திரைகளை கடந்து செல்லும் தலைவர் றோட்டறியின் எஸ். கிரிதரன் (2015-2016) வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சக்கர நாற்காலி ஒன்று பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
நடப்பாண்டிற்கான (2016-2017) செயலாளராக றோட்டறியின் ஜி. நிர்மலராஜ் மற்றும் செயலாளராக றோட்டறியின் எம். சோபனராஜா ஆகியோர் பதவியேற்றனர்.
விசேட அதிதியாக றோட்டறியன் ஆதில் ரபீக் ( உதவி ஆழுனர் 2016-2017) மற்றும் கௌரவ அதிதியாக றோட்டறியன் தொமிங்கோ ஜோர்ஜ் ( தலைவர் மட்டக்களப்பு றோட்டறிக் கழகம் ( 2014-2015) கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.