சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் நேற்று(22) வியாழக்கிழமை கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரியின் பணிப்பில் கொக்கட்டிச்சோலை உதவி பொலிஸ் பரிசோதகர் கே.வரதராஜன் தலைமையிலான குழுவினர் சென்று வீடொன்றின் சமயலறையில் பகல்வேளையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டபோது ஒருவரை கைது செய்துள்ளதுடன், அதற்கு பயன்படுத்திய பொருட்களையும், பதார்த்தங்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து அவரை பிணையில் விடுவித்ததுடன் எதிர்வரும் 03.10.2016ம் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.