(எப்.முபாரக்)
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கபுரம் பள்ளிக்குடியிருப்பு தோப்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி இன்று புதன்கிழமை (21) அதிகாலை 6.00 மணியளவில் உயிர் இழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிர் இழந்தவர் முத்துலிங்கம் ஜானகியம்மா (65) என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் அதிகாலை மீன் வாங்கிக் கொண்டு வரும் வழியில் விளாமரம் ஒன்றுக்கு அருகில் விளாம் பழம் புறக்குவதற்குச் சென்ற போது அவ் மரத்திற்கு பக்கத்திலிருந்த யானையே இப் பெண்ணை தாக்கியுள்ளது.
உயிர் இழந்த பெண்ணுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முத்துலிங்கம் கௌசல்யா என்ற மகள் ஒருவரும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4