பெரியகல்லாறு மெதடிஸ்த ஆலய வளாகத்தில் திரு திருமதி பாக்கியராஜா நினைவாக சிறுவர் பூங்கா கையளிப்பு

[ ரவிப்ரியா ]          
பெரியகல்லாறு மெதடிஸ்த ஆலய வளாகத்தில் திரு திருமதி டானியல் பாக்கியராஜா நினைவாக அவர்களின் குடும்பத்தினரால் அமைக்கப்பட்ட  சிறுவர் பூங்கா கையளிக்கும் நிகழ்வு ஆலய போதகர் வண எஸ்.சசிகுமார் அவர்களின்
தலைமையிலும் ஆசீர்வாதத்துடனும் நடைபெற்றது. குடும்பத்தினரால் நினைவுப் படிகம் திரைநீக்கம் செய்யபபட்டு, ஒவ்வொரு பகுதியாக திறப்பு விழா நடைபெற்றது. இறதிப் பகுதி சிறுவர்களால் திறந்து வைக்கப்பட்டது.