ஆங்கில போதனா மொழி மூலம் கல்வி பயிலும் ஈஸ்ரன் இன்ட நஷனல் கல்லூரி மாணவியின் சர்வதேச சாதனை.




சர்வதேசப் பரீட்சைகளில் வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கும் ஈஸ்ரன் இன்டநஷனல் கல்லூரியின் மற்றுமொரு அளப்பரிய சாதனைப் படைப்பு.

ஆங்கில போதனா மொழி மூலம் கல்வி பயிலும் செல்வி. ரம்ஜா டிரோன் எனும் மாணவி அண்மையில் நடைபெற்ற IGCSE (லண்டன் O/L) பரீட்சையில் தமிழ் பாடத்தில் சர்வதேச ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாதனையை நிலைநாட்டியமை எமது கல்லூரிக்கு மட்டுமல்லாது, மட்டக்களப்பு மாவட்டத்திற்கே பெருமை தேடித் தந்துள்ளது.




மற்றுமோர் அரியசாதனை:
கடந்த ஜுன் மாதம் Edexcel (UK)  நிறுவகத்தினால் நடாத்தப்பட்ட 3, 4, 5, 7, 8ம் தர மாணவர்களுக்கான Progress பரீட்சையில் எமது கல்லூரி மாணவ மாணவிகள் திறம்படச் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 99 மாணவ மாணவிகள் தோற்றிய இப் பரீட்சையில் 24 A* (High Achievers), 17 Grand Achievers, 58 General Achievers  புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமை வியத்தகு மாபெரும் சாதனையாகும்.