கனடா பாடும் மீன்கள் அமைப்பினரால் புல்லுமலையில் புதிய வீடுகள் கையளிப்பு

(எஸ்.சதீஸ்)
கனடா பாடும் மீன்கள்  அமைப்பினரால்   மட்டக்களப்பு மாவட்டத்தின்   பெரிய புல்லுமலை கிராமத்தில் மீள் குடியேறிய வறுமை நிலையில் வாழும்    ஐந்து குடும்பங்களுக்கு 2.9 மில்லியன் ரூபா செலவில்   ஐந்து வீடுகளும்,  அக் கிராமத்திற்கு தபால் நிலையம், கிராமசேவையாளர் அலுவலகம் என்பன நிர்மாணிக்கப்பட்டு    கடந்த    24ஆம் திகதி வீடுகள் அணைத்தும் மக்கள் பாவனைக்காக கனடா பாடும் மீன்கள்  அமைப்பினரால் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சமூக ஆர்வலர் தம்பிராஜா பாபு வசந்தகுமார் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வீடுகளை திறந்துவைத்தனர்.