விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

(ஷமி.மண்டூர்) வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கணேசபுரம் பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை மாலை(21) இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்ததாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

றாணமடு மற்றும் கணேசபுர பிரதேசத்தை சேர்ந்த இரு நபர்களின் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்தாகவும்.படுகாயங்களுக்கு உள்ளான றாணமடு பிரதேசத்தைச் சேர்ந்த நபர் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதன வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளிப்பொலிஸார் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.