வாகரை மற்றும் கதிரவெளி பொது நூலகங்களில் தொழில்நுட்பத்தின் ஊடாக வாசிப்புத்திறனை மேம்படுத்தல் செயலமர்வு


(ஜெ.ஜெய்ஷிகன்)
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாகரைப் பிரதேசசபையின் கீழ் இயங்கும் நூலகங்கள் மற்றும் வாசிப்பு நிலையங்கள் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக வாகரை வேள்ட் விஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் வாகரை மற்றும் கதிரவெளி பொது நூலகங்களில் தொழில்நுட்பத்தின் ஊடாக வாசிப்புத்திறனை எவ்வாறு மேம்படுதலாம் என்ற தலைப்பின் கீழ் வாகரை, பால்சேனை, கதிரவெளி ஆகிய பாடசாலைகளில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான  செயலமர்வு நூலகப் பொறுப்பாளர்களின் தலைமையில் இடம்பெற்றது. 
இந்நிகழ்வில் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹாரூன், வேள்ட்விஷன் நிறுவனத்தின் கல்விப்பிரிவுக்குப் பொறுப்பான திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜன், வாகரை பிரதேசசபை நிதி உதவியாளர் ஜெயரூபன் ஆகியோருடன் வளவாளராக வேள்ட்விஷன் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் ரமிஸ்டன் உளவள ஆலோசனை வைத்தியர் ஜுடி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இக்கருத்தரங்;கின் மூலம் மாணவர்கள் தமது கல்வித் தேடலில் எவ்வாறு இணையத்தினை பயன்படுத்தலாம் என்ற அறிவினையும் தகவல் தொடர்பாடல் நுட்பங்களினையும் அறிந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு பிரதான அனுசணையை வேல்ட்விஷன் நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது.