வாகரைப் பொது நூலகத்தில் உளவள ஆலோசனை செயலமர்வு

(ஜெ.ஜெய்ஷிகன்)
ஒக்டோபர் 2016 தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாகரைப் பிரதேசசபையின் கீழ் இயங்கும் வாகரை, கதிரவெளி, வட்டவான் ஆகிய நூலகங்களில் தெளிவான வாசிப்பு வளமான சமூகத்தின் முன்னோடி எனும் தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
அதன் ஓர் அங்கமாக வாகரைப் பிரதேசத்தில் எழுத்தறிவு வீதம் குறைவாக காணப்படும் பிள்ளைகளின் பெற்றோருக்கான உளவள ஆலோசனை செயலமர்வு வாகரைப் பொது நூலகத்தில் நூலகப்பொறுப்பாளரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு வாகரைப் பிரதேசசபை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹாரூன் மற்றும் வளவாளராக சமூக சீர்திருத்த உத்தியோகத்தர் புவனேந்திரன் வாகரைப் பிரதேச செயலக சமூக சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.