கணவரை மயங்கச்செய்துவிட்டு அதே வீட்டில் உல்லாசமாக இருந்த பெண்ணுக்கும் கள்ளக்காதலனுக்கும் தர்மஅடி

கணவருக்கு மயக்கமருந்து கொடுத்து, தனது கள்ளக்காதலனுடன் அதே வீட்டில் விடிய விடிய உல்லாசமாக இருந்த வேளை, மயங்கியிருந்த கணவரது உறவினர்களால் தர்மஅடி விழுந்த சம்பவம், திருகோணமலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீட்டிலுள்ள கணவரும் மனைவியும், உறக்கத்துக்குச் செல்ல முன்னர், அயலவர் வீட்டுக்குச் சென்று கதைத்துக்கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர்.

எனினும் சனிக்கிழமை (22) இ​ரவு, கணவரும் மனைவியும் வருவர் என்று எதிர்பார்த்திருந்த   அயல்வீட்டுக்காரர்கள், ஏன் இன்று வரவில்லை என்று, குறித்த வீட்டின் மனைவியை அழைத்துக் கேட்டுள்ளனர். தனது கணவர் உறக்கத்தில் இருப்பதாகவும் அதனால் தான் வரவில்லை என்றும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், சனிக்கிழமை இரவு, குறித்த பெண்ணின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளொன்று வருவதை அயல் வீட்டார் கண்டுள்ளனர். அவர்களுடைய வீட்டில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக எண்ணி, கணவருடைய உறவினரொருவரின் அலைபேசி மூலம் அறியப்படுத்தியுள்ளனர்.

வீட்டின் கதவுகள் மூடியுள்ளதாகவும் வீட்டில் வெளிச்சம் ஏதும் தென்படவில்லை என்றும் கூறியுள்ளனர். இதன் பின்னர், அதிகாலை வீட்டுக்கு வந்த உறவினர்கள் கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்கப்படாமையால், கதவை உடைத்து உள்ளே ​சென்று பார்த்தபோது, அங்கிருந்த பெண் (மனைவி) கள்ளக்காதலனுடன் இருப்பதையும் கணவர் மயக்கத்தில் இருப்பதையும் கண்டுள்ளனர். ஆத்திரமடைந்த உறவினர்கள் கள்ளக்காதலனுக்கும் பெண்ணுக்கும் தர்மஅடி கொடுத்துள்ளனர்.


இதன்போது காயமடைந்த பெண், நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதே பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயே (வயது 36) இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

இதேவேளை, மயக்கமுற்றிருந்த கணவர், கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதன் போது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், கோமரங்கடவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்