மட்டக்களப்பு நகரின் சில பகுதிகளில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெறுவதாக முறைப்பாடு ! உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவு

மட்டக்களப்பு நகரின் சில பகுதிகளில் சலூன் என்ற போர்வையில் பாடசாலை மாணவிகளை பயன்படுத்தி விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் , மாணவர்கள் , பெற்றோர்கள் இதனால் விசனமடைந்து இருப்பதாகவும் நீதிமன்றுக்கு கிடைக்கபெற்ற  முறைப்பாடுகளையடுத்து ,

இவ்வாறான  கலாசார சீரழிவுக்கு இடமளிக்கும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட  பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவுவிட்டுள்ளார்

இவ்வாறன கலாச்சார சீரழிவு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்படப்  வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது .