'வாசிப்போம் வாழ்வில் உயர்வோம்' வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கலை நிகழ்வு

(செ.துஜியந்தன்)
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு 'வாசிப்போம் வாழ்வில் உயர்வோம்' எனும் தொனிப்பொருளில் மண்முனைப் பற்று பிரதேச சபை ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்வு ஆரையம்பதி கலாசார மண்டாத்தில் திங்கட்கிழமை (31) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ''மண்முனைப்பு'' நூல் வெளியீடும், கதிரவன் கலைக்கழகத்தினால் 'மக்கள் மத்தியில் வாசிப்பு அதிகரித்துள்ளது அதிகரிக்கவில்லை'எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்வுகளும்  இடம்பெற்றது. 



இந் நிகழ்வில், மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராச்சி உதவி ஆணையாளர். கே.சித்திரவேல், பிரதேச சபை செயலாளர் என்.கிருஸ்ணபிள்ளை உள்ளிட்டோர் கலந்துகொண்டதனை படங்களில் காணலாம்.