(அனா)
வாழைச்சேனை பரியோவான் முன்பள்ளியில் வியாழக்கிழமை (1) கலைநிகழ்வும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
மேற்படி முன்பள்ளியின் ஆசிரியைகளின் ஏற்பாட்டில் வாழைச்சேனை பரியோவான் ஆலய அருட்தந்தை திரு.தயாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அதிதிகளின் வருகையுடன் மங்கள விளக்கேற்றல் வைபவத்துடன் முன்பள்ளி பாலகர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
மேலும், விளையாட்டு மற்றும் ஆக்கங்கள் போன்றவற்றில் திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் வழங்கி வைக்கப் பட்டது.
இவ் நிகழ்வில் பரியோவான் ஆலய அருட் தந்தை, ஆசிரியைகள், கிராம சேவகர் கே.கிருஷ்ணகாந்தன், வாழைச்சேனை இந்து கல்லூரி அதிபர் ஏ.ஜெயஜீவன், மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4