மட்டக்களப்பு நகரில் மூன்றுவீடுகளில் தங்க ஆபரணம், பணம், மோட்டார் சைக்கிள் கொள்ளை



 ( மொகமட்தஸ்-ரீப்)

மட்டக்களப்பு  நகரில்இன்றுஅதிகாலை  மூன்றுவீடுகளுக்குள் உட்புகுந்த கொள்ளையர்கள்    தங்க ஆபரணம் ,பணம் ,மோட்டார் சைக்கிள்மற்றும் பணம் மீளப்பெறும் தன்னியக்க ஏ.ரீ.எம்.வங்கியட்டைகளை கொள்ளை இட்டுச்சென்றுள்ளதாக பொலிஸ் தகவல் தெரிவிக்கின்றது '

இந்த கொள்ளைச்சம்பவத்தில் சுமார் 1 2 இலட்சம் ரூபா பெறுமதியான உடைமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் மீளப்பெறும் தன்னியக்க ஏ.ரீ.எம்.வங்கியட்டையில் மூன்றுதடவைகள் பணம் மீளபெறப்பட்டுள்ளதாகவும்  பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இச்சம்பவம்பற்றி மட்டக்களப்பு தலைமையகப்பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .