மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அஞ்சலி நிகழ்வு


(சிவம்)
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (11) பி.ப. 2.00 மணியளவில் கல்லடி துளசி மண்டபத்தில் நடைபெறும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்குக் கிளையின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அஞ்சலி நிகழ்வு மண்முனை வடக்குக் கிளையின் தலைவர் வி. தவராஜா தலைமையில் இடம்பெறவுள்ள  இந்நிகழ்வில் ஈகைச் சுடரேற்றல், மலரஞ்சலி, அகவணக்கம், அருளுரை, கவிதாஞ்சலி மற்றும் அஞ்சலியுரைகள் இடம்பெறும்.

கல்லடி காயத்திரி பீடம் சிவயோகச்செல்வன் த. சாம்பசிவ சிவாச்சாரியார் மற்றும் மட்டக்களப்பு மறை மாவட்டக் குரு முதல்வர் ஏ. ஜேசுதாசன் அடிகள் ஆகியோரின் அருளுரையும் மற்றும் திருமதி லக்ஸ்மணரஜனியின் கவிதாஞ்சலியும் இடம்பெறும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதிக் கிளையின் தலைவர் த.கோபாலபிள்ளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேந்திரன், பொன் செல்வராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராஜா, இரா.துரைரெட்ணம், ஞா. கிருஷ்ணபிள்ளை, கோ. கருணாகரன், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, பாராளுமன்ற உறுப்பினர்களான ச. வியாளேந்திரன், ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சருமான கி. துரைராசசிங்கம் ஆகியோர் அஞ்சலியுரையை நிகழ்த்துவர்.