விபத்தில் சிறுவன்பலி



கல்முனைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணைப்பகுதியில் கனரகவாகனம் மோதியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வியாழன் 8  ஆம் திகதி இன்று 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்



இதுதொடர்பாக மேலும் தெரியவருகையில் பெரியநீலாவணையினைச் சேர்ந்த நஷில் முகமட் அஸ்ரிப் 2 வயது எனும் சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்
அதாவது பெரியநீலாவணை வீ.சி வீதியால் வந்த கனரகவாகனம் வீதியை கடக்க முற்பட்ட சிறுவனில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது இதுதொடர்பாக கல்முனைப் பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்