பட்டிப்பளைப்பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகளுக்கான சிங்கள வகுப்புக்கள் - ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்ப்பு

(படுவான் பாலகன்) தேசிய சகவாழ்வு இன நல்லிணக்க அரச கருமமொழிகள் அமைச்சின் செயற்றிட்டத்தின் கீழ் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் இளைஞர், யுவதிகளுக்காக முன்னெடுக்கப்படவிருக்கும் இலவச சிங்கள வகுப்புக்கள் கடுக்காமுனை பாலர்பாடசாலையில் எதிர்வரும் டிசம்பர் 14ம் திகதியிலிருந்து 25ம் திகதி வரையான 12நாட்களுக்கு இடம்பெறவுள்ளது, 


இவ்வகுப்புக்களுக்கு கலந்து கொள்ளவிருக்கும் ஆர்வமுள்ள மண்முனை தென்மேற்கு பிரதேசத்தினைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அனைவரும் தங்களது பெயர்களை தமது கிராமசேவை உத்தியோகத்தர்களிடம் பதிவுசெய்து கொள்ளலாம் என உதவிப்பிரதேச செயலாளர் தெரிவித்தார். மேலும் குறித்த வகுப்புக்கள் நிறைவில் நடாத்தப்படும் பரீட்சையில் சித்தியடைகின்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.