இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சி கருத்தமர்வு!


வேலை வாய்ப்பு தேடும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு   கிண்ணையடி சமூக அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில்,  பிளான் இன்டநெசனல் நிறுவனத்தின் நிதியுதவியில் நேற்று (8) கிண்ணையடி  சரஸ்வதி வித்தியாலத்தில் நடைபெற்றது.

மேலும், சமூக அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் எஸ்.செந்தில்குமார் தலைமையில் இடம்பெற்ற இவ் தொழில்வழிகாட்டல் கருத்தரங்கானது "சிறந்த தொழில் துறைகளினூடாக எமது சமூகத்தை முன்னேற்றுவோம்" எனும் தொனிப்பொருளை மையப்படுத்தி வேலை தேடும் நிலையில் உள்ள இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து சிறந்த வளவாளர்களை கொண்டு நடத்தப்பட்டதுடன்.


இதில் அறுபதிற்கும்(60) மேற்பட்டவர்கள்  பங்குபற்றி சிறந்த பயனடைந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இவ் அமர்வில் தொழில் வழிகாட்டல் உத்தியோகஸ்தர்
ஏ.சதானந்தன், நிகழ்ச்சி திட்ட  உத்தியோகஸ்தர்களான ஏ.உதயதாசன், மற்றும்   எம்.எச்.எம்.பைசல், மனித வள உத்தியோகத்தர் திருமதி     கே.சிவாநந்தன் பாடசாலையின் பிரதி அதிபர் கே.கலைபிரியன்   ஆகியோர் பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.

மேலும், கிராம சேவகர் கே.கஜேந்திரராஜா, சங்கத்தின் உப தலைவர், பொருளாளர், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.