பொது பல சேனாவால் பதற்றமான மட்டு நகர்

(வரதன்)
நீதி மன்ற உத்தரவையும் மீறி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் தடுக்க முற்பட்டபோது நகரின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டு பதற்ற நிலைமையும் போக்குவரத்து சேவையும் பாதிப்படைந்ததுடன் பொது மக்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டு பின் பொலிஸாரினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
.பதட்டநிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது.