வீதியோர நாடகம்

(படுவான் பாலகன்) சிவில் சமூக அமைப்புக்களின் உள்வாங்கல் மற்றும் ஆளுகைத்திறன்களை கட்டியெழுப்புவதனூடாக நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தல் என்ற தொனிப்பொருளிலான வீதியோர நாடகம் முனைக்காடு கிராமத்தில் இன்று(7) புதன்கிழமை இடம்பெற்றது.

பல்வேறு நிறுவனங்களின் உதவியுடன் கமீட் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் குறித்த வீதியோர நாடகத்தினை கதிரவன் கலைக்கழகத்தினர் ஆற்றுகை செய்து நடித்தனர்.


சமூகத்தில் சமூக அமைப்புக்களில் அங்கத்துவம் பெறுவதில், சமூகசேவைகளில் ஈடுபடுவதில் மக்கள் காட்டுகின்ற ஆர்வம் குறைவடைந்து செல்லும் நிலையில் தொடர்ந்தும் எல்லோரும் இணைந்து சமூகபணிகளை முன்னெடுக்கும் போது; ஏற்படக்கூடிய அபிவிருத்தி தொடர்பிலும் வெளிக்காட்டப்பட்டது.