சமூக விஞ்ஞானப் போட்டியில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவன் கணேசன் சஞ்ஜய்குமார் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை

(ஜெ.ஜெய்ஷிகன்)
கல்வி அமைச்சினால்  தேசிய ரீதியில் கடந்த 2015ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் வாழைச்சேனை  இந்துக்கல்லூரி மாணவன் செல்வன். கணேசன் சஞ்ஜய்குமார் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளான்.

இம் மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் அ.ஜெயஜீவன் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. இதன்போது மாணவரின் சாதனையைப் பாராட்டி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுவதையும் அவரை கௌரவித்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னம் என்பன அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.