இன்று பிற்பகல் காலநிலையில் மாற்றம்!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, காங்கேசன்துறை முதல் மன்னார், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடல் பிரதேசங்களில் காற்றானது மணித்தியாலத்திற்கு 55 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.