துறைநீலாவணை விஞ்ஞான விழிப்புணர்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பினரால், பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வு


துறையூர் தாஸன்(சஞ்சயன்)

துறைநீலாவணை விஞ்ஞான விழிப்புணர்வு மற்றும் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் மூன்றாம் தவணைப் பரீட்சையில் வகுப்பு ரீதியாக அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதல் மூன்று இடங்களையும் தக்க வைத்துக்கொண்ட மாணவர்களை பாராட்டி பரிசில் வழங்கும் நிகழ்வு துறைநீலாவணை மகாவித்தியாலய மண்டபத்தில், பிரதி அதிபர் எஸ்.கிருபைராஜா தலைமையில் நேற்று (02.12.2016) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது.

தரம் ஆறில் இருந்து 13 வரை கல்வி கற்கும் ஒவ்வொரு தரங்களிலும் இருந்து முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்கள் அதிபர்,ஆசிரியர்களினால் பாராட்டி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


ஒவ்வொரு தவணைப் பரீட்சையின் இறுதியிலும்,துறைநீலாவணை விஞ்ஞான விழிப்புணர்வு மற்றும் அபிவிருத்தி ஒன்றிய அமைப்பினரால் இவ் ஊக்கப்படுத்தும் நிகழ்வு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள்,விஞ்ஞான விழிப்புணர்வு மற்றும் அபிவிருத்தி ஒன்றியத்தின் அங்கத்தவர்கள்,பாடசாலை அபிவிருத்திக்குழுவினர்,பாடசாலை சமூகத்தினர் உள்ளிட்ட பலர் இதன் போது கலந்துகொண்டனர்.