EDCS - கல்வி கூட்டுறவுச் சங்கத்தின் பணிமனை நாளை (03) மட்டக்களப்பில் திறக்கப்படவுள்ளது.

கல்விச் சேவை ஊழியர்களின் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையின் பணிமனை நாளை (03.12.2016) காலை 11.00 மணிக்கு மட்டக்களப்பு இல: 56/A, கோவிந்தன் வீதியில் திறக்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் பணிப்பாளர் சபை மற்றும் பொதுச்
சபை அங்கத்தவர்களும் விசேட அதிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்; இதில்  EDCS அங்கத்தவர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்
கிழக்கு மாகாண அங்கத்தவர்கள் அனைவரினதும் கோவைகள் இப் பணிமனைக்கே இடமாற்றப்பட்டுள்ளன. இதுவரைகாலமும் தமது பணிகைளை நிறைவேற்றுவதற்கு கொழும்பிக்கு சென்ற அங்கத்தவர்கள் இனி இப்பணிமனையிலேயே தங்களின் அலுவல்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
தகவல்: பா.செல்லத்துரை, பணிப்பாளர், கிழக்கு மாகாண கிளை, 0771318557