கல்குடா கல்வி வலயத்தில் உள்ள முண்ணனிப்
பாடசாலையான மட்/ககு/ வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் தரம் 01 மாணவர்களை
வரவேற்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (11.01.2017) காலை அதிபர் அ.ஜெயஜீவன்
தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற
நிகழ்வில் முகாமைத்துவத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் தி.ரவி, கோட்டக்கல்விப்
பணிப்பாளர் நா.குணலிங்கம், ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.யோகராஜா,
ஆசிரிய ஆலோசகர் திருமதி.வை.கோபாலரெத்தினம், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் ,
பழைய மாணவர் சங்கத்தினர், மக்கள் வங்கி
முகாமையாளர், ஆசிரியர்கள், பெற்றார்கள் நலன்
விரும்பிகள், எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் மாணவர்களின்
ஆக்கத்திறனை வெளிக் கொணரும் வகையிலான பல்வேறு செயற்பாடுகள் இடம்பெற்றதும்
குறிப்பிடத் தக்கது.